தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொண்டால், காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் உதவத் தயார் என பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கவில் முன்னால் பாகிஸ்தான் தூதராக பணியாற்றியவர் ஹூசைன் ஹக்கைன். இவர் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதில் அவர், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலை குறித்து கூறியிருப்பதாவது, கடந்த, 1950ம் ஆண்டு முதலே, பாகிஸ்தான், தெற்காசிய நாடுகளுடனான பிரச்சனையில் அமெரிக்கா தலையிடுவதை விரும்பி வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் பிரச்னையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில், அமெரிக்காவின் உதவியை, பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நாடி வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, 2009ல், பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் சர்தாரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தலிபான், லஷ்கர் - இ - தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி புரிவதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக் கொண்டால், காஷ்மீர் பிரச்னைக்கு உதவத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். எனினும், ஒபாமாவின் விருப்பத்தை சர்தாரி நிராகரித்ததாக, ஹூசைன் தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
|