செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்களின் தடயங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்கு அங்கிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவர வேண்டும் என்பது ராசாவின் நீண்ட காலத் திட்டம்.
தற்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நாசா பெரிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. தற்போது உள்ள நிதியை வைத்து 2040-ஆம் ஆண்டுக்கு முன் செவ்வாயின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டு வர முடியாது என்றும், இத்திட்டத்திற்கு 91,800 கோடி ரூபாய் (11 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வரை செலவழிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தத் தொகையை விடக் குறைந்த செலவில், விரைவாக இத்திட்டத்தைச் செயல்படுத்த, மாறுபட்ட சிந்தனைகளுக்கான (‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ ஐடியா) தேடலை நாசா தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்குள் புதிய திட்டத்திற்கான மாதிரி உருவாக்கப்படும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
|