|
|||||
முடிவுக்கு வந்தது அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி !!! |
|||||
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபையும், பிரதி நிதிகள் சபையும் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவில் நிலவி வந்த பொருளாதார பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் புதிய பட்ஜெட்டுக்கு பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் கிடைக்காததால் செலவுக்கு நிதியின்றி அரசு நிர்வாகம் இரண்டு வார காலமாக முடங்கிக் கிடந்தது. இதனால் பல அரசு துறைகள் மூடப்பட்டதால், சம்பளம் இல்லா விடுப்பில் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் விடுப்பில் சென்றுள்ளனர். இந்த நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காணுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஆளும் கட்சியான ஜனநாயக கட்சிக்கும், எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் வெள்ளை மாளிகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்த ஒப்பந்தபடி, கடனுக்கான உச்சவரம்பு 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்களாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. மேலும், ஜனவரி 2015 வரையிலான நிதி ஒதுக்கீடுக்கும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். இதனால், இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
|||||
by Swathi on 16 Oct 2013 0 Comments | |||||
Tags: அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஒபாமா பொருளாதார நெருக்கடி அமெரிக்கா குடியரசு கட்சி ஜனநாயக கட்சி அதிபர் ஒபாமா | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|