உலக நாயகன் கமலஹாசனின் கனவுப் படமான மருதநாயகம் கடந்த 1997-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த படத்தை அப்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து ராணி எலிசபத் துவங்கி வைத்தார். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்வீரர், முகமது யூசப் கானின் வாழ்க்கையை மையமாக வைத்துதான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டமாக தொடங்கிய இந்த படத்தின் படபிடிப்புகள், போதிய நிதி பற்றாக்குறை காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த படத்தை மீண்டும் எடுக்க கமல் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்தப் படத்தை இப்போது தயாரிக்க நிச்சயமாக 100 கோடி தேவைப்படும். நான் சொல்வது உண்மையிலேயே 100 கோடி. மருதநாயகம் படத் தயாரிப்புக்கு பணம் மட்டும் ஒரு பொருட்டல்ல. படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க ஒரு மிகப்பெரிய டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க் தேவை. அதற்கான ஆட்கள் வரவேண்டும் என்று கூறியிருந்தார் கமல்.
சமீபகாலமாக நம் நாட்டிலும், தமிழ் திரையுலகத்திலும் ரூ.100 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் படங்கள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. அதன்காரணமாக கமலுக்கும் தனது மருதநாயகம் படத்தை மீண்டும் புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததுள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த கமல், மருதநாயகம் படம் 2015ம் ஆண்டு துவங்கும் என்று கூறியிருக்கிறார். மருதநாயகம் படத்தை, லண்டனை சேர்ந்த தொழிலதிபரும், கமலின் நண்பருமான ஒருவர் தயாரிக்க முன்வந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிகின்றன.
|