இயக்குனர் ஷங்கர், விக்ரம் நடித்த ஐ படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் அமீர்கானை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், அமீர்கான் நடிப்பில் வெளிவந்து பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வரும் பி.கே. படத்தை, ஷங்கர், விஜயை வைத்து தமிழில் ரீ-மேக் செய்ய இருப்பதாககடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் ஐ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் விஜய்யும் பங்கேற்றதால், அடுத்தபடம் விஜய் - ஷங்கர் கூட்டணியாக இருக்கும் என உறுதியாக எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஷங்கர் அடுத்தப்படியாக தமிழ் படத்தை இயக்க போவதில்லையாம். மாறாக இந்தியில் ஒரு படத்தை இயக்க போகிறாராம். அதுவும் அமீர்கானை வைத்து படம் இயக்க உள்ளாராம். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே ஷங்கர் கதையை ரெடி பண்ணிவிட்டாராம். தற்போது அந்த கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறாராம்.
விரைவில், ஷங்கர் - அமீர் இணையும் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.
|