நம்பிக்கை சந்த்ரு இயக்கி, நடித்த மூ பு ஜாக்கிரதை என்ற குறும்படத்தின் அறிமுக விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் சீனிவாசன் பேசியதாவது:
நான் தயாரிச்சு நடிச்ச லத்திகா படம் பத்து நாள்தான் ஓடுச்சி படம் பார்க்க வர்றவங்களுக்கு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து 225 நாள் ஓட வச்சேன். அடுத்து ஆனந்த தொல்லை படத்தை ஆரம்பிச்சேன். முதலில் ஒரு நாளைக்கு 8 ஆயிரம்தான் செலவு ஆகும்னு என்கிட்ட பொய் சொல்லி படத்தை ஆரம்பிச்சாங்க, ஆனால் . ஒரு நாளைக்கு 3 லட்சம் செலவாச்சு. கஷ்டப்பட்டு படத்தை எடுத்து முடிச்சேன். இப்ப சொல்லுங்க எங்கிட்ட எப்படி பணம் இருக்கும்.
நிறைய பேர் இன்னும் நான் நல்ல வசதியா இருக்கிறதா நினைச்சிக்கிட்டிருக்காங்க. நடிக்க சான்ஸ் தர்றாங்க. சம்பளம் கேட்டால் உங்ககிட்ட இல்லாத பணமா சார் உங்களுக்கு எதுக்கு சம்பளம்னு கேட்கிறாங்க. நிஜமாவே என்கிட்ட பணம் கிடையாது. அதனால சம்பளத்தை கொடுத்திடுங்க என புலம்பி தள்ளினார் பவர்.
|