லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பவர் ஸ்டார், சமூக வலைத்தளங்கள் மூலம் மிக பிரபலமாகி, கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தர, தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் அவரது சில நாள் சிறைவாசம் காரணமாக ஒப்பந்தமான படங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.
இருந்தாலும், ஐ, கோலி சோடா போன்ற படங்கள் அவரது மார்கெட்டை ஓரளவுக்கு நிலை நிறுத்தியது. இந்நிலையில், கோணலா இருந்தாலும் என்னோடது என்ற படத்தில் பவர் ஸ்டார் வில்லனாக முதன் முறையாக நடிக்க இருக்கிறாராம். மேலும் வில்லனாக நடிப்பதை பார்த்து மக்கள் பயந்தால் பரவாயில்லை, ஆனால் அதையும் பார்த்து சிரித்து விட்டால் கேரக்டர் வீணாகிவிடுமே என்று முதலில் யோசித்தாராம் பவர் ஸ்டார்.
இயக்குனர் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால் தற்போது நடிக்க சம்மதித்துவிட்டாரம் பவர் ஸ்டார். எனினும் அவரது உண்மையான கேரக்டர் என்பதால் கண்டிப்பாக அது ஒத்துவரும் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம் பவர் ஸ்டார் சீனிவாசன்.
|