2013 ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நோபல் பரிசினை, ஐ.நா சபையின் பின்னணியில் இயங்கும், சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு மையம் (ஓ.பி.சி.டபிள்யு) வென்றுள்ளது. 1997 ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ரசாயன ஆயுதங்களை கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 57 ஆயிரம் டன், ரசாயன ஆயுதங்களை இந்த அமைப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|