2013 ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, மூன்று அமெரிக்கா வல்லுனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், சமூக சேவை, பொருளாதாரம் ஆகிய துறைகளில், சாதனை படைத்தவர்களுக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு, ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சொத்து விலை குறித்த அனுபவ பகுப்பாய்வுக்காக, லார்ஸ் பீட்டர் ஹான்சென், யுஜெனி பேமா, ராபர்ட் ஷில்லர் ஆகியோர் இந்த பரிசை கூட்டாக பெற உள்ளனர்.
|