LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    இந்திய சுற்றுலா Print Friendly and PDF

இந்தியாவில் முதல்முறையாக துவாரகாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவை அறிமுகம்..!

கடலுக்கு அடியில் தொலைந்துவிட்டதாக நம்பப்படும் பழங்கால நகரமான துவாரகாவில் குஜராத் அரசு, சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. 'இந்துக் கடவுளான கிருஷ்ணரின் நகரம்' என்று அழைக்கப்படும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட துவாரகாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக நீருக்கடியில் செய்யப்படும் சுற்றுலா வசதி இதுவாகும்.

 

தற்போதைய திட்டத்தின்படி, 2024 அக்டோபரில் தீபாவளிக்கு முன்னதாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு இலக்கு வைத்துள்ளது. இத்திட்டத்தின்படி, கடலுக்கு அடியில் 100 மீட்டர் தூரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டு, நீருக்கடியில் உள்ள கடல்வாழ் உயிரினங்களைப் பார்ப்பார்கள்.

 

நாட்டின் முக்கிய கோவில் நகரம் 

 

ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலும் 24 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும். மேலும் இந்தக் கப்பல் இரண்டு அனுபவம் வாய்ந்த பைலட்கள் மற்றும் ஒரு தொழில்முறை பணியாளரால் வழிநடத்தப்படும். அனைத்துப் பயணிகளுக்கும் ஜன்னல் பார்வையை வழங்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படும்.

 

ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்களை ஈர்க்கும் நாட்டின் முக்கிய கோவில் நகரங்களில் ஒன்றான துவாரகாவின் சுற்றுலா வாய்ப்புகளை நீர்மூழ்கிக் கப்பல் வசதி அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது.

by Kumar   on 31 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மூணாறில் வரலாறு காணாத வெப்பம். மூணாறில் வரலாறு காணாத வெப்பம்.
உலக அதிசயம் தாஜ் மஹால் ! உலக அதிசயம் தாஜ் மஹால் !
இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்! இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்!
இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் ஓவியக் கலைகள் இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் ஓவியக் கலைகள்
இமயமலையைப் பறந்தபடி சுற்றிப்பார்க்க கைரோகாப்டர் சுற்றுலா சேவை அறிமுகம்... இமயமலையைப் பறந்தபடி சுற்றிப்பார்க்க கைரோகாப்டர் சுற்றுலா சேவை அறிமுகம்...
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நதி தீவு இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நதி தீவு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.