|
||||||
இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது - பில்கேட்ஸ் நம்பிக்கை !! |
||||||
உலகில் இன்னும் 20 ஆண்டுகளில் ஏழை நாடுகளே இருக்காது என உலகின் மிகபெரிய செல்வந்தரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் தங்களது கேட்ஸ் பவுண்டேஷன் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தான தர்மங்கள் குறித்தும், வருங்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கி கடிதம் வெளியிடுவது கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டாவின் வழக்கமாகும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான கடிதத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
உலகில் வளரும் நாடுகள் முயற்சியால் கண்டுபிடிக்கப்படும் புதுமையான கண்டுபிடிப்புகள் காரணமாக உலகில் ஏழை நாடுகளே இல்லாமல் போகும் நிலை இன்னும் 20 ஆண்டுகளில் வரும் என்றார். அதிக விளைச்சல் தரும் விதைகள், சக்தி வாய்ந்த நோய் தடுப்பு மருந்துகள், தொழில்நுட்பங்கள், முதலீடுகள் முதலியன ஏழை நாடுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், ஏழை நாடுகளில் வாழும் தனிநபர்களின் வருமானம் வரும் 2035ஆம் ஆண்டில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தற்போது இருக்கும் தனிநபர் வருமானத்தை மிஞ்சக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் ஒவ்வொரு வருடமும் ஒரு ஏழை நாட்டிற்கு பெருமளவு நிதியுதவி செய்து அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்கும் பணியை செய்து வருவதாகவும், அதன்பணி தொடர்ந்து நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். |
||||||
by Swathi on 22 Jan 2014 2 Comments | ||||||
Tags: பில்கேட்ஸ் கேட்ஸ் கேட்ஸ் தம்பதி ஏழ்மை நாடுகள் 2035 Bill Gates poor countries | ||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|