|
|||||
உலகின் முதல் செயற்கை இதயம்....... வாழ்நாளை 5 வருடம் அதிகரிக்குமாம்..... |
|||||
பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் பிரெஞ்சு பயோமெடிக்கல் பார்ம் கார்மத் என்ற நிறுவனம் செயற்கை இருதயத்தை வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கை இதயம் உடலில் வெளியில் பொருத்தக்கூடியதாகவும், லித்தியம் பேட்டரி மூலம் இயங்கக்கூடியதாகவும் உள்ளது. உயிருள்ள உறுப்பை போன்று செயல்படும் இந்த செயற்கை இதயத்தின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகளாகும். பாரிசில் உள்ள ஜார்ஜஸ் பிராம்ட்யு மருத்துவமனை நிபுணர்கள் இந்த செயற்கை இருதயத்தை 75 வயது முதியவருக்கு பொருத்தியுள்ளனர். தற்போது செயற்கை இதயம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பும் செயற்கை இருதயம் தயாரித்து பொருத்தப்பட்டுள்ளது. அது ஒரு தற்காலிக மாற்றாக தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயற்கை இதயத்தை மனித உடல் ஏற்க வேண்டும் என்பதால், இந்த செயற்கை இருதயமும், அதற்கு தேவையான திசுக்கள் உட்பட துணை பொருட்களும் கால்நடை உயிரினங்கள் மூலமாக எடுக்கப்பட்ட திசுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோவுக்கும் குறைவான எடையில் செயற்கை இருதயம் உள்ளது. இயற்கை இருதயத்தை விட அதிக எடை தான். எனினும் உயிரின திசுக்கள் மூலம் தசைகள் உட்பட எல்லாம் பொருத்தப்படுவதால் இருதயத்துக்கு ரத்தம் பாய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. நோயாளி இப்போது இயல்பு நிலைக்கு வந்து விட்டார். அவர் சிறிது சிறிதாக நடக்க அனுமதிக்கப்படுகிறார். எந்த கோளாறும் இதுவரை ஏற்படவில்லை என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகின்றனர். |
|||||
by Swathi on 23 Dec 2013 0 Comments | |||||
Tags: செயற்கை இதயம் 75 வயது நபர் இதய மாற்று அறுவைசிகிச்சை பிரெஞ்சு பயோமெடிக்கல் பார்ம் கார்மத் Artificial Heart Human Artificial Heart Artificial Heart Transplant | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|