பிரபல மொபைல் ஆப்ஸ் நிறுவனமான வாட்ஸ்ஆப்பிற்கு உலகம் முழுவதும் 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்நிலையில் பயனாளர்களை கவரும் வகையில், புதிய வசதிகளை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். நேரடியாக பேசிக்கொள்ள முடியாது.
ஏற்கனவே வைபர் ஆப்ஸ் இந்த சேவையை கொண்டிருந்தாலும், வாட்ஸ்ஆப் சேவையே பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|