|
||||||||
சிட்னியில் உள்ள முருகன் கோவிலில் சைவ நெறி மாநாடு - ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன !! |
||||||||
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி முருகன் ஆலயத்தில் திருவள்ளுவர் ஆண்டு 2045, ஆவணித் திங்கள் 13,14,15 (29.08.14, 30.08.14, 31.08.14) ஆகிய நாட்களில் சைவநெறி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முருகன் ஆலய சைவ மன்றத்தினரும், உலக சைவப் பேரவையின் ஆஸ்திரேலியா கிளையின் உறுப்பினர்களும் இணைந்து நடத்துகின்றனர்.
சிட்னியில் உள்ள முருகன் கோவிலில் சைவ நெறி மாநாடு - ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன !!
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி முருகன் ஆலயத்தில் திருவள்ளுவர் ஆண்டு 2045, ஆவணித் திங்கள் 13,14,15 (29.08.14, 30.08.14, 31.08.14) ஆகிய நாட்களில் சைவநெறி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முருகன் ஆலய சைவ மன்றத்தினரும், உலக சைவப் பேரவையின் ஆஸ்திரேலியா கிளையின் உறுப்பினர்களும் இணைந்து நடத்துகின்றனர்.
ஆஸ்திரேலியா மண்ணில் சைவத்தையும், தமிழையும் வேரூன்றச் செய்வதே இம்மாநாட்டின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் இரண்டு பாடசாலைகளை சைவ மன்றம் நடத்தி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பண்ணிசை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள பாடசாலைகளில் இந்து சமயம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இப்பாடசாலைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இலங்கையின் கொழும்பு விவேகானந்த சபையினரால் நடத்தப்படும் சமய பாட தேர்வினை எழுதி வெற்றி பெற்று வருகின்றனர். சைவ நெறி மாநாட்டில் வெளியிடப்படும் மலரில் பிரசுரிப்பதற்காக இந்திய வாழ் அறிஞர்கள், இலங்கை, சான்றோர்கள், பாடசாலை மாணவ, மாணவியர்கள் ஆகியோர்களிடம் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor.saivaneri@gmail.com
|
||||||||
by Swathi on 10 Jun 2014 2 Comments | ||||||||
Tags: Veggie Morality Conference Sydney Murugan Temple சைவ நெறி மாநாடு சிட்னி முருகன் கோவில் | ||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|