பாகிஸ்தான் ஆதரவுடன், இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதி ஜேக் கீனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், அமெரிக்கா பாரளமன்றத்தில் பேசியதாவது, பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பொறுப்பேற்ற பிறகும், பாகிஸ்தான் ஆதரவுடன், இந்தியாவில் அரங்கேறும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயங்கரவாத அமைப்புகள் மூலம், பாகிஸ்தான் அரசு, இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவளித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் மீதும், நோட்டோ படைகள் மீதும் தாலிபான்கள் தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான்தான் ஆதரவு அளித்து வருவதாக குறிப்பிட்ட ஜேக் கீனி. தற்போது பாகிஸ்தான் அரசிடம் இருந்து நாம் எதையும் எதிர்பார்க்கமுடியாது என்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தாலிபான்கள் சுதந்திரமாக உலவி வருவதாகவும் கூறியுள்ளார்.
|