இலங்கையில் இந்த மாதம் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து அரசு புறக்கணிக்க வலியுறுத்தி, லண்டன் மாநகரில் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
நவம்பர் 10 முதல் 17ம் தேதி வரை இலங்கை தலைநகர் கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில், தமிழர்களின் கோரிக்கையை ஏற்று, கனடா அரசு மட்டும் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று மத்திய அரசை தமிழக முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுத்தி அங்கு வாழும் தமிழர்கள் நேற்று லண்டனில் மாபெரும் கண்டன பேரணி நடத்தினர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் காமன்வெத் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும், ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
|