மருந்து கண்டுபிடிக்கப்படாத பல நோய்களை குணப்படுத்துவதற்காகவும், மற்ற நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில், இனி நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வேலை செய்யாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் கூறியதாவது,
மனிதர்களுக்கு நோயை உண்டாக்கும் சூப்பர் பக்ஸ் எனும் கிருமிகள் முன்பு இருந்ததை விட இப்போது வீரியத்துடன் உருவாகி வருகின்றன. எனவே தற்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை இனி பயன்படுத்தினால் அதனால் எந்த பயனும் கிடைக்காது. எனவே சூப்பர்சக்தி கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை அதிக அளவில் பரிந்துரைப்பது, நோயாளிகள் இத்தகைய மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் சாப்பிடாமல், இடையில் நிறுத்துவது போன்ற காரணங்களால் நோய் கிருமிகள் வீரிய சக்தியுடன் மாறி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
|