பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பட வேலைகளில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது பாடல்களை கேட்கும் ஆர்வம் உடையவர்.
சமீபகாலமாக அவர் அடிக்கடி கத்தி படத்தில் இடம் பெற்ற ‘பக்கம் வந்து...’ பாடலை கேட்பதாக கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறும் போது, “கத்தி படத்தில் இடம்பெற்றுள்ள பக்கம் வந்து பாடல் சிறப்பாக உள்ளது. தினமும் இப்பாடலை கேட்கிறேன். மேலும் மெட்ராஸ் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் நீ...’ என்ற பாடலையும், ‘சென்னை வட சென்னை... என்ற பாடலையும் அதிகமாக கேட்கிறேன்” என்று ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் ஐ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
|