பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதர்வாவுக்கு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுக்கொடுத்தது.
ஆனால் அதற்கு பிறகு அதர்வா நடிப்பில் வெளிவந்த படங்கள் சொல்லும்படியாக வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து, அதர்வா ஈட்டி, கணிதம், சண்டிவீரன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் ஈட்டி, கணிதம் ஆகிய படங்களின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள சண்டிவீரன் படமும் முடியும் தருவாயில் இருக்கிறதாம். அந்த படத்தை தயாரித்திருப்பது இயக்குநர் பாலா என்பதால், அப்படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து சில நாட்களுக்கு முன் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது.
தற்போது அதர்வா உள்பட படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் டப்பிங் பணியை முடித்து விட்டதாகவும், ஒருசில சிறிய கேரக்டர்களில் நடித்தவர்கள் மட்டுமே டப்பிங் செய்ய வேண்டியதுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
விஜய்யின் கத்தி, ரஜினியின் லிங்கா படங்களை அடுத்து தண்ணீர் பிரச்சனையை வித்தியாசமான கோணத்தில் கூறியிருக்கிறாராம், இயக்குனர் சற்குணம், இந்த படம் அவருக்கு மட்டுமின்றி அதர்வாவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
|