பூமியை விட பெரிதான கோளை, அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
"கெப்ளர் 10" என பெயரிடப்பட்டுள்ள இந்த கோள், பூமியின் எடையை போல 17 மடங்கும், பூமியின் பரப்பளவை போல் இரண்டு மடங்கும் பெரியதாம்.
பூமியை விட இந்த கோள் பெரியதாக இருப்பதால், காட்ஜிலா கோள் என்றும் விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளர்கலாம்.
இந்த காட்ஜிலா கோள், 45 நாட்களுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறதாம்.
உறுதியான பாறைகளால் நிறைந்துள்ள இந்தக் கோளில், உயிர் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்ற ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவின், 'கெப்ளர் ஸ்பேஸ்கிராப்ட்' இந்த கோளை முதலில் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
|