மகாத்மா காந்தி புனே ஏர்வாடா சிறையில் இருந்தபோது பயன்படுத்திய ராட்டை அடுத்த மாதம் 5ம் தேதி லண்டனில் ஏலத்திற்கு வருகிறது.
இந்திய சுதந்திர போராட்டித்தின் ஒரு பகுதியான, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் காந்திஜி ஈடுபட்ட போது, கைது செய்யப்பட்டு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர், எளிதில் கொண்டு செல்லக் கூடிய வகையில், மடக்கும் வகையிலான ராட்டையை பயன்படுத்தினார். பின்னர் அந்த ராட்டையை அமெரிக்க பாதிரியார் ஒருவருக்கு பரிசாக அளித்தார். அந்த ராட்டை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனமான முல்லக்ஸில் ஏலத்திற்கு வருகிறது. இந்த ராட்டையின் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 59 லட்சத்து 68 ஆயிரத்து 827 ஆகும். முல்லக்ஸில் காந்தி தொடர்பான சுமார் 60 பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட உள்ளன. அவற்றுள் முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவையும் அடக்கம்.
|