|
|||||
கார்த்தி படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும் !! சூர்யாவின் ஆசை !!! |
|||||
சென்னையில் நடைபெற்று வரும் சினிமா நூற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்ச்சியாக இயக்குனர் லிங்குசாமி, நடிகர் சூர்யாவை நேர்க்காணல் செய்தார், அதில் சில முக்கிய பதிவுகள் இதோ,
லிங்குசாமி: நீங்கள் அம்மா பிள்ளையா, அப்பா பிள்ளையா?
சூர்யா: வீட்டுக்கு நான்தான் முதல் பிள்ளை.
லிங்குசாமி: கார்தியும், நீங்களும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் யார் வில்லன், யார் ஹீரோ?
சூர்யா: அப்படி ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கோம். சினிமால நான் ஹீரோவா நடிச்சாலும் வீட்டுல நான் ஒரு சைலண்ட் வில்லன். கார்த்தி ரொம்ப நல்ல பையன். அதனால இரண்டு பேரும் நடிக்கிற படத்தில் கார்த்தி தான் ஹீரோ. நான் தான் வில்லன். அதற்காக கிளைமாக்சுல அடியெல்லாம் வாங்க மாட்டேன்.
லிங்குசாமி: ரஜினி, கமல் ரெண்டு பேரும் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் பற்றி உங்கள் கருத்து..?
சூர்யா: ரஜினிசாரும், கமல்சாரும் இருக்கிற சினிமால அவுங்களோட நானும் இருக்கிறேங்றதே ரொம்ப பெருமையான விஷயம். சினிமாவுக்கு வர்ற எல்லோருக்குமே அவுங்கதான் பென்ஞ் மார்க். அவுங்க சாதனைகளை அவுங்களே உடைச்சாத்தான் உண்டு. வேற யாரும் பிரேக் பண்ண முடியாது-. தலைக்கு ஏறாத வெற்றி, தளராத உழைப்பு இந்த இரண்டும் தான் அவர்களை உயரத்தில் வச்சிருக்கு.
லிங்குசாமி: ஜோவை நீங்கள் சந்திக்காமல் இருந்திருந்தால்...?
சூர்யா: வாழ்க்கை இவ்வளவு அழகானதுன்னு தெரியாமலே போயிருக்கும்.
லிங்குசாமி: உங்கள் பார்வையில் இதுவரை வெளிவந்த தமிழ் சினிமாவில் டாப் டென் எது?
சூர்யா: நான் சொல்றத படங்களை வரிசைப்படுத்த வேண்டாம். பராசக்தி, ஆயிரத்தில் ஒருவன், முள்ளும் மலரும், .தண்ணீர் தண்ணீர், 16 வயதினிலே, நாயகன், பாட்ஷா, மறுபக்கம், சேது, பருத்தி வீரன். |
|||||
by Swathi on 23 Sep 2013 0 Comments | |||||
Tags: வில்லன் கார்த்தி சூர்யா லிங்குசாமி நடிகர் சூர்யா கார்த்தி படம் Surya | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|