கோவையிலுள்ள ஜி. ஆர். டி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 14.11.2017 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்று குழந்தைகள் தின உரை நிகழ்த்தினார் குழந்தைகளை மையப்படுத்துகிற கல்விமுறை குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாகப் பேசியதோடு ஜவகர்லால் நேரு எழுதிய Glimpses Of World History, An Auto – Biography, Discovery Of India ஆகிய மூன்று முக்கிய நூல்களின் உள்ளடக்கத்தை மிகவும் விவரித்துப் பேசினார். பள்ளியின் தலைவர் டி. வித்யபிரகாஷ், தாளாளர் சித்ரா வித்யபிரகாஷ், நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
|