LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!

கொன்றை அல்லது சரக்கொன்றை பேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் மரமாகும். வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது கொன்றை மரம். சரக்கொன்றை மரத்தின் பூ, இலை, மரப்பட்டை முதலானவற்றுக்கு மருத்துவக் குணம் உண்டு. ஆங்கிலத்தில் இம்மரமானது ‘Golden Rain Tree’ என அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கொன்றை மரம் ‘அக்வந்தா’ (தங்க மழை மரம்) என்று அழைக்கப்படுகிறது.

 

இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் இதன் தாயகமாகும். கொன்றை மரமானது இந்தியா மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகிறன. சித்திரை மாதத்தில் மட்டும் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும். தமிழ்ப் புத்தாண்டான சித்திரையை வரவேற்கும் விதமாகச் சித்திரை மாதத்தில் பொன்னிறமான கொன்றை மலர்கள் சரம் சரமாகப் பூத்துக் குலுங்கும். இதனால் இதற்குச் சரக்கொன்றை என்ற பெயரும் உண்டு. வசந்த காலத்தின் இறுதியில் இலைகளே பார்க்க இயலாத அளவிற்குக் கொன்றை மரம் முழுவதும் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

 

சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான மலர் கொன்றை. இலக்கியங்கள் சிவபெருமானை கொன்றை மலரைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன. பல சிவத்தலங்களில் கொன்றை மரம் தல விருட்சமாக உள்ளதைக் காணலாம்.

 

கொன்றைப் பூ கேரளாவின் மாநில மலராகும். இதனால் கேரளாவில் இம்மலருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. கேரளாவில் சித்திரையில் கொண்டாடப்படும் ‘சித்திரை விஷு’ அன்று சரக்கொன்றை மலருக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கேரளாவில் விஷு பண்டிகையன்று காலை எழுந்ததும் பூத்துக் குலுங்கும் கொன்றை மலரைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. கொன்றை கேரளாவில் ‘கொன்னை’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து நாட்டின் தேசிய மலர் மற்றும் மரம் கொன்றையாகும்.

 

கோடையின் வறட்சியிலும் வளரக்கூடிய ஆற்றல் கொண்டது சரக்கொன்றை. கொன்றை மரமானது மஞ்சள் நிறத்தில் சரம் சரமாகப் பூத்துக் குலுங்கும். கொன்றை பூச்சரங்கள் பொன்னிறமாக மின்னும். இதனால் இதற்கு ‘சொர்ண புஷ்பம்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

 

கொன்றை மலரானது சங்க காலத்தில் முல்லை நிலத்திற்குரிய பூவாகக் கருதப்பட்டது. ஐங்குறுநூறு, கொன்றைவேந்தன், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு முதலான சங்க இலக்கியங்களில் கொன்றை பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 மலர்களில் கொன்றை மலரைக் கபிலர், ‘தூங்கிணர் கொன்றை’ என்று குறிப்பிட்டுள்ளார். கொத்துக் கொத்தாகத் தொங்கும் கொன்றை என்பது இதன் பொருளாகும்.

 

மருத்துவ குணங்கள் பல நிறைந்த இந்த அபூர்வமான கொன்றை மரங்களை நாம் வீட்டிலும் வளர்க்கலாம்.

by Kumar   on 25 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.