குறும்பட இயக்குனராக இருந்த கார்த்திக் சுப்பாராஜ், பீட்சா என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
பீட்சா படம் விஜய் சேதுபதிக்கு மட்டுமல்ல அதை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜுக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.
பீட்சா படத்தை தொடர்ந்து, சித்தார்த், சிம்ஹா, லக்ஷ்மிமேனனை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்பராஜ். இந்த படம் விமர்சகர்களிடம் மட்டுமல்ல, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் அடுத்து இயக்கப்போகும் படம் என்ன என்ற கேள்வி திரையுலகில் எழுந்துள்ளது. அதற்கான விடை தற்போது தெரிய வந்திருக்கிறது.
முன்னணி நட்சத்திரங்களை வைத்து இறைவி என்ற படத்தை இயக்கப்போகிறாராம். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கில் இருக்கும் கார்த்திக் சுப்பாராஜ் அதை முடித்த பிறகு படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்பது குறித்த தேர்வில் இறங்குவாராம்.
இறைவி படத்தில் கண்டிப்பாக சிம்ஹாவும், கருணாகரனும் இருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.
|