ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆண்டில் மட்டும் 12 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த பட்டியலில் ஐ, கோச்சடையான், லிங்கா, காவியத்தலைவன் ஆகிய தமிழ் படங்களும் அடங்கும்.
2014 ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான மூன்று படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, 2014ம் ஆண்டு, தனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டு எனவும், இந்த ஆண்டில் இசை அமைப்பைத் தாண்டி ஒரு புதிய படத்திற்கு கதை, வசனம் எழுதி, அந்தப் படத்தை தயாரித்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த படம் பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. அவர் மேலும் கூறுகையில், இயக்குனர் சங்கரின், 'ஐ' படத்திற்கு இசைய மைத்ததை பெருமையாக கருதுகிறேன். ஒரே ஆண்டில், இரண்டு பெரிய பிரபலங்களான, சங்கர், ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைத்துள்ளதை, மிகவும் பெருமையாக கருதுகிறேன்,'' என்றார்.
|