விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரபல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு 35 மில்லியன் டாலர் அபராதம் விதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்ஃபோசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது. அமெரிக்கா அலுவலகங்களில் பணிபுரிவதற்காக, இந்தியர்களை, ஒர்க் விசாவில் வரவழைப்பதற்கு பதிலாக விசிட்டர் விசாவில் வரவழைத்து பணியமர்த்தியதாக கூறப்படுகிறது. ஒர்க் விசாவுக்கான கட்டணத்தைவிட, விசிட்டர் விசா பெறுவது எளிது மற்றும் கட்டணம் குறைவு என்பதினாலேயே இன்ஃபோசிஸ் இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், விசா முறைகேட்டில் ஈடுபட்டதற்காக இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு, 35 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|