ஊழலுக்கு எதிராக போராடியதற்காக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேக்கு பிரிட்டிஷ் கொலம்பியா சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச நேர்மைக்கான, அல்லார்டு பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் சமூக ஆர்வலர் அன்ன ஹசாரே. இவரது சேவையை கவுரவிக்கும் விதமாக, கனடா நாட்டின் வான்கூவர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் கொலம்பியா சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச நேர்மைக்கான இந்த அல்லார்டு பரிசும் தந்து கௌரவிக்கப் பட்டது. பொதுவாக ஊழலை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் மனித உரிமைக்காக போராடுபவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழாவில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேசியதாவது, ‘எனக்கு பணம், சொத்து மீது ஆசை இல்லை. இருப்பினும், இந்த பரிசை பெற்றதன் மூலம், ஊழலுக்கு எதிரான எனது வாழ்நாள் போராட்டம் மேலும் வலிமை அடையும். இந்த சர்வதேச அங்கீகாரம் மூலம் மாற்றத்துக்கான இயக்கம் வலுப்பெறும்' எனத் அவர் தெரிவித்தார்.
|