உலகில் உள்ள அனைத்து மக்களையும் ஃபேஸ்புக் மூலம் இணைப்பதே தனது லட்சியம் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஃஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் வரை ஃபேஸ்புக்கில் 100 கோடி பேர் பதிவு செய்ததன் மூலம் உலகின் மிகப்பெரிய சமூக இணைய தளமாக ஃபேஸ்புக் உருவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தங்களது இரண்டாவது காலாண்டு அறிக்கையை வெளியிட்ட ஃபேஸ்புக், அதில் தனது பயனாளிகள் எண்ணிக்கை 115 கோடியை தாண்டியதாக தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 70 கோடி பேர் ஃபேஸ்புக்கை தினமும் உபயோகிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
|