சீனாவில் மின்னஞ்சல்(E-Mail) சேவையை இந்த மாதத்துடன் நிறுத்தி கொள்வதாக உலகின் முன்னணி நிறுவனமான யாஹூ(Yahoo) நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.
சீனாவில் இணையதளங்கள் மூலம் அரசுக்கு எதிராக பொது மக்கள் கருத்து தெரிவிப்பது அதிகரித்துள்ளதால், சீன அரசு அடிக்கடி இணையதளங்களை முடக்கி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் தனது மின்னஞ்சல் சேவையை நிறுத்தி கொள்ளப்போவதாக யாஹூ(Yahoo) நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலில் தகவல் அனுப்பியுள்ளது. அதில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை யாஹூ மின்னஞ்சல்(E-Mail) வழியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம் எனவும். அதன் பிறகு எங்களது சீன பங்குதாரர் அலிபாபா நிறுவனத்தின் மின்னஞ்சல்(E-Mail) கணக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மாறிக்கொள்ளலாம் என யாஹூ(Yahoo) நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது'. யாஹூ(Yahoo) நிறுவனத்தின் இந்த முடிவால் சீன வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
|