|
|||||
நேபாளத்தில் கி.மு.6ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைய புத்தர் கோவில் கண்டுபிடிப்பு !! |
|||||
நேபாளத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மிகப்பழமையான புத்த வழிபாட்டுத்தலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சியின் மூலம், புத்தர் 2 நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது கி.மு.6ம் நூற்றாண்டில் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நேபாளத்தில் பிரபலமான கோயில் லும்பினியில் உள்ள மாயாதேவி கோயில். லும்பினியில் உள்ள மாயாதேவி கோயில் அருகில் மாயாதேவியின் நந்தவனம் இருந்த இடத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் மிகப்பழமையான வழிபாட்டுதலம் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளது. புத்தருடைய வரலாற்றில், அவரது தாயார் மாயாதேவி தாய்மையுற்று இருந்தபோது மரங்கள் அடர்ந்த நந்தவனத்தில் புத்தரை பெற்றெடுத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக தற்போது உள்ள மாயாதேவி கோயில் அருகில் மரங்கள் அடர்ந்த நந்தவனம் இருந்ததற்கான அடையாளங்களும், மேற்கூரையில்லாத வழிபாட்டுதல இடிபாடுகளும் கிடைத்துள்ளது. இவை கி.மு.6ம் நூற்றண்டைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இதனால் புத்தர் மரத்தடியில் பிறந்திருக்கலாம் என்ற வரலாறு, உண்மை என்றும், அவர் பிறந்த இடமான மரம் புனிதமாக கருதப்பட்டு வணங்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் புத்தர் 6ம் நூற்றாண்டிலேயே பிறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பே புத்தர் பிறந்த காலமான கி.மு.3ம் நூற்றாண்டிலேயே அசோக சக்கரவர்த்தியும் பிறந்ததாக கருதப்பட்டது. அவர் வங்கதேசம் முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான பகுதியை ஆட்சி செய்தபோது புத்த சமயத்தை பின்பற்றி பரப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 27 Nov 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|