|
||||||||
மலேசியாவில் உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 |
||||||||
மலேசியாவில் உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 வணக்கம். உலகத் தமிழர்களின் நுழைவு வாயிலாக விளங்கும் மலேசிய மண்ணில் தமிழ்ப் பெண்களின் ஆளுமையை உலகறியச் செய்யும் நோக்கில் உலகத் தமிழ்ப் பெண்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும்முகமாய்த் திரைமீளன் ஒரிசா பாலு ஐயா அவர்களால் 2016, சூன் மாதம் தொடங்கப்பட்டு, பெண்களின் தனித்திறன் போற்றி வரும் ஐயை அமைப்பும் முனைவர் இலட்சுமி கார்மேகம், தொழில் முனைவோர் திருமதி விசித்திரா சரவணக்குமார் அவர்களால் 2017, அக்டோபர் மாதம் கனடாவில் தொடங்கப்பட்டு தமிழ்ப் பெண்கள் தரணியின் கண்கள் என்னும் முழக்கத்துடன் பெண்களால் பெண்களுக்காகப் பெண்களாலேயே நடத்தப்படும் பன்னாட்டு இணைய இதழான இணையத் தோழியும் சுஙகைபட்டானி தமிழ்சங்கமும் இணைந்து மார்ச் 17 அன்று" உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாட்டை" கோலாலம்பூர் நகரில் நடத்த உள்ளோம். மாநாட்டில் ஆய்வுத் திறனை வளர்க்கும் நோக்கில் ஆய்வரங்கம், கலைத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கலையரங்கம் அமைக்கப்பட்டு உலகளாவிய தமிழ்ப் பெண்களின் பேராற்றல் போற்றப்படும். உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஆர்வமுள்ள தமிழ்ப் பெண்கள் அனைவரும் மாநாட்டில் கட்டுரை வழங்குவதற்கும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுவதற்குமான இணைய வழி ஏற்பாடுகள் செய்யப்படும். உலகம் உய்ய தொண்டாற்றி வரும் தமிழ்ப் பெண்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் "ஐயை விருது" வழங்க உள்ளோம் மாநாட்டின் மையநோக்கு: உலகளாவிய ஒருங்கிணைப்பாளர் திரைமீளன் ஒரிசா பாலு(+9199402 40847) மலேசிய ஒருங்கிணைப்பாளர் |
||||||||
by Swathi on 16 Feb 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|