LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலக தண்டுவட பாதிப்பு தினம் - சிறப்பு சாலை விதிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்

உலக தண்டுவட பாதிப்பு தினத்தை முன்னிட்டு தோழன் அமைப்பும் ,SIPA -தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து சிறப்பு சாலை விதிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் மேற்கொண்டனர்


ஒரு சில வினாடிகளில் நிகழும் விபத்து ஒருவரை வாழ்நாள் முழுவதும்  பாதிக்கும் என்பதை எடுத்துரைக்க விபத்துகளில் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சக்கர  நாற்காலிகளில் வந்து சாலைகளில் வண்டிகளில் பயணம் செய்வோருக்கு எடுத்துரைத்தனர்


நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய திரு. ஞான பாரதி அவர்கள் "தண்டுவட பாதிப்பு என்பது ஒருவரை வாழ்நாள் முழுவதும் முடமாக்கி அவரை இயல்பான வாழ்க்கையை வாழ  முடியாமல் செய்து விடும்" என்றார்.


மேலும் "தண்டு வடம் பாதிக்கப்பட்டவரால் நடக்க முடியாது , கைகளை கூட  இயல்பாய்  பயன்படுத்த இயலாது .மேலும் இயல்பாய்  சிறுநீர் , மலம் கழிக்க இயலாது . தொடுதல், வலி போன்ற உணர்வுகளை  இழந்துவிடுவார்கள் என விளக்கினார் .மேலும் அடிபட்ட  இடத்தை பொறுத்து பாதிப்பின்  மாறுபடும் என்றும் , முக்கியமாக இன்றுவரை தண்டு வாடா பாதிப்பிற்கு  முழுமையான மருத்துவம் இல்லை" எனவும் கூறினார் .


இதை வருமுன் காப்பதே சிறந்தது , சாலையில் மோட்டார் வாகனத்தில் செல்வர் பாதுகாப்புடனும் .நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் .


உலக முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தண்டு வாடா பாதிப்பு அடைகின்றனர் எனவும் அதில் பெரும்பாலானோர் சாலை விபத்துக்களாலேயே பாதிப்பு அடைகின்றனர் எனவும் கூறினார்.


தோழன் அமைப்பின் திரு . ராதாகிருஷ்ணன் நிகழ்விற்கு வந்திருந்த தண்டுவட பாதிப்படைந்த தன்னார்வலர்களின் மன உறுதியையும் , தைரியத்தையும்  பாராட்டி இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு மிகுந்த சிரமத்தையும் பொருட்படுத்தாமல் வந்ததற்கு நன்றி தெரிவித்தார்,


பிரச்சாரத்தில் வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகள் :


1.தண்டுவடம் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது நிறைய பேருக்கு பாதிப்படைந்ததே தெரிவதில்லை.


2.CRASH சோதனை செய்யபட்டபிறகே வாகனங்களை சாலைகளில் அனுமதிக்கவேண்டும், அதற்கான சோதனை மையம் இந்தியாவில் இதுவரை இல்லை ஆனால் உலகின் பல நாடுகளில் அதனால் தரம் குறைந்த வண்டிகள் தடுக்கப்படுள்ளது 


3. தண்டுவடம் பாதிப்படைந்தோருக்கு நலவாழ்வு மற்றும் அவர்களின் வாழ்வியல் ஆதரத்துக்கான முன்னெடுப்பு பணிகளில் அரசு இன்னும் கூடுதல் கவனம் தேவை 

by Swathi   on 05 Sep 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.