LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாத்தல் மற்றும் மரம் நடுதல் பணிகள்

தமிழ்நாட்டின் நிலத்தடிநீர் அபாயகரமான நிலையை நோக்கிச் சென்றுவரும் நிலையில் சென்னை முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை அனைத்தும் குழாய் தண்ணீரை நம்பி இருந்த நிலை பொய்த்துவிட்ட நிலையில் தண்ணீர்ப் பிரச்சினை அனைவரையும் சிந்திக்கவைத்துள்ளது. 

கிராமங்களில் உள்ள குளங்கள் தூர்வார ஊர் கட்டுப்பாடு ஏற்படுத்தி வீட்டிற்கு ஒருவர் தூர்வாரும்  பணி செய்ய வரவேண்டும் அல்லது அவர்கள் வராததற்கு உரிய நிதியைக் கொடுத்துவிடவேண்டும் என்று ஊர்கூடி நீர்நிலைகளைப் பாதுகாத்ததை நாம் அறிவோம்.  அந்த நிலை மாறி, இன்று அந்தந்த ஊரில் உள்ளவர்களே கைகோர்த்து நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து பேராசை பயணங்களைத் தொடர்ந்ததால் விளைவை இன்று அனைவரும் சந்திக்கிறோம்.  

தமிழ்நாட்டின் பல்வேறு பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்படாமல் போட்டுவைத்து அதை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டிவிட்டனர். எஞ்சியத்தையாவது காப்பாற்றுங்கள் என்று பலரும் கூக்குரல் கொடுத்துவரும் நிலையில், இயற்கையாக ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடும், அதனால் ஊர் நிர்வாகத்தால் குழாயில் நீர் கொடுக்கமுடியாது நிலையும் , நிலத்தடி நீர் மட்டம் ஐந்நூறு, ஆயிரம், இரண்டாயிரம் என்று ஒவ்வொரு பகுதிக்கேற்பப் போய்விட்ட நிலையில், ஆழ்துளையில் போட்டாலும் நீர் கிடைக்குமா என்ற பெரும் கவலை மக்களைச் சூழ்ந்துள்ளது.  இந்த நிலையில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரி பாதுகாப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, உள்நாடு, வெளிநாடு தொண்டு அமைப்புகள், தனி மனிதர்கள் கைகோர்த்து நீர்நிலைகளைப் பராமரிப்பது , மரம்நடுவது என்று பல்வேறு பணிகள் தமிழகத்தில் பரவலாகப் பார்க்கப்படுகிறது.  

இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் CSR - நிதிகள்  பல இடங்களில் நீர்நிலைகளைப் பராமரிக்கச் செலவிடப்படுவது மக்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.  இந்த வேகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகள் தொய்வில்லாமல் அரசும், தனியார் நிறுவனங்களும், தொண்டு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இணைந்து நீர்நிலைகளை மீட்டெடுப்பது, மரம் நடுவது ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் தமிழகத்தின் நீராதாரத்தை ஓரளவு மீட்டெடுக்கலாம். 

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் கிடைக்கும் நிதிகளை நீராதாரத் திட்டங்களுக்குச் செலவிட, தடுப்பணைகள் கட்ட, மரம் நட அரசு  உறுதியான கொள்கை முடிவு எடுத்தால் உறுதுணையாக இருக்கும். 

by Swathi   on 28 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.