|
|||||
விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு !! |
|||||
அரிமா நம்பி படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சிகரம் தொடு. இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் விக்ரம் பிரபுவுடன் மோனல் கஜ்ஜர், சதீஷ் மற்றும் பல நட்ச்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்குனர் கெளரவ் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அப்போது பத்திரிகையாளர்களிடம் விக்ரம் பிரபு பேசுகையில், கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களுக்குப்பிறகு நான் நடித்துள்ள வித்தியாசமான படம் சிகரம்தொடு. இது பாசிட்டீவ் எனர்ஜியுள்ள படம். ஆக்சன் மட்டுமின்றி இப்படத்தில் காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்.
படத்தின் கதையை கெளரவ் என்னிடம் சொன்னபோதே, எனக்குள் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது.அப்பா-மகனுக்கிடையே நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதல் பாதியில் ஜாலியாகவும், அடுத்த பாதியில் சீரியசாகவும் நடித்திருக்கிறேன். முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். அதனால் பாடி லாங்குவேஜ் மட்டுமின்றி, எனது ஹேர் ஸ்டைலையும் மாற்றி நடித்திருக்கிறேன்.
போலீஸ் வேடம் என்றதும் என் தாத்தா சிவாஜிணேசன் நடித்த தங்கப்பதக்கம் படம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. அவ்வளவு கம்பீரமாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து மெய்மறந்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தைப் பொறுத்தவரை என் தாத்தா, அப்பா சாயல் எதுவும் இல்லாமல் தனித்துவமாக நடித்திருக்கிறேன்.
அதையும் மீறி அவர்களின் சாயல் எனது நடிப்பில் வெளிப்பட்டால் அது தானாக வெளிப்பட்டதாக இருக்குமே ஒழிய, நானாக செய்ததாக இருக்காது. மேலும், ஏடிம் கொள்ளை சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நடித்தபோது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சேலஞ்சிங்காக இருந்தது.
என்னை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் படம் என்பதால் அதிக ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன் என்று சொல்லும் விக்ரம் பிரபு, இந்த படம் ஏடிஎம் கொள்ளைகளை தடுக்க வழி சொல்லும் படமாகவும் இருக்கும் என்கிறார். தாத்தா சிவாஜிகணேசன் நடிப்பை பார்த்து மெய்மறந்து போன விக்ரம்பிரபு !!
அரிமா நம்பி படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சிகரம் தொடு. இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் விக்ரம் பிரபுவுடன் மோனல் கஜ்ஜர், சதீஷ் மற்றும் பல நட்ச்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்குனர் கெளரவ் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது பத்திரிகையாளர்களிடம் விக்ரம் பிரபு பேசுகையில், கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களுக்குப்பிறகு நான் நடித்துள்ள வித்தியாசமான படம் சிகரம்தொடு. இது பாசிட்டீவ் எனர்ஜியுள்ள படம். ஆக்சன் மட்டுமின்றி இப்படத்தில் காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். படத்தின் கதையை கெளரவ் என்னிடம் சொன்னபோதே, எனக்குள் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது.
அப்பா-மகனுக்கிடையே நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதல் பாதியில் ஜாலியாகவும், அடுத்த பாதியில் சீரியசாகவும் நடித்திருக்கிறேன். முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். அதனால் பாடி லாங்குவேஜ் மட்டுமின்றி, எனது ஹேர் ஸ்டைலையும் மாற்றி நடித்திருக்கிறேன். போலீஸ் வேடம் என்றதும் என் தாத்தா சிவாஜிணேசன் நடித்த தங்கப்பதக்கம் படம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. அவ்வளவு கம்பீரமாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து மெய்மறந்திருக்கிறேன்.
ஆனால் இந்த படத்தைப் பொறுத்தவரை என் தாத்தா, அப்பா சாயல் எதுவும் இல்லாமல் தனித்துவமாக நடித்திருக்கிறேன். அதையும் மீறி அவர்களின் சாயல் எனது நடிப்பில் வெளிப்பட்டால் அது தானாக வெளிப்பட்டதாக இருக்குமே ஒழிய, நானாக செய்ததாக இருக்காது.
மேலும், ஏடிம் கொள்ளை சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நடித்தபோது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சேலஞ்சிங்காக இருந்தது. என்னை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் படம் என்பதால் அதிக ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன் என்று சொல்லும் விக்ரம் பிரபு, இந்த படம் ஏடிஎம் கொள்ளைகளை தடுக்க வழி சொல்லும் படமாகவும் இருக்கும் என்கிறார்.
|
|||||
by Swathi on 09 Aug 2014 0 Comments | |||||
Tags: Vikram Prabhu Sigaram Thodu விக்ரம் பிரபு சிகரம் தொடு | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|