கத்தி படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்யுடன், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரிதேவி, சுதீப் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுதிகிறார். இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்களாம். இதில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டாராம். அதில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
படத்தில் விஜயும், சுருதி ஹாசனும் பாடுகிறாரா என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளார் இசை அமைப்பாளர். தேவிஸ்ரீபிரசாத்.
நட்டி நட்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட , தென் ஆற்காடு ஏரியாக்களின் விநியோக உரிமையை பெரிய தொகை கொடுத்து ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் உரிமையாளர் முரளி கைப்பற்றியிருக்கிறாராம்.
இதற்கு காரணம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் நூறு கோடிரூபாய் வசூல் செய்ததே என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
|