LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விடுதலை வேள்வியில் தமிழகம் நூல் மூன்றாம் பாகம் வெளியிடப்பட்டது - மாபெரும் தொடக்கம்

‘ விடுதலை வேள்வியில் தமிழகம் ’ நூல் மூன்று பாகங்களை உள்ளடக்கியது. இரண்டு பாகங்கள் வெளிவந்து 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இந்நூலின் 3 ஆம் பதிப்பு தற்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது. 3 ஆம் பாகம் விரைவில் வெளிவரவுள்ளது.
 
இந்நூலின் முதல் இரண்டு பாகங்களை தமிழக மாணவர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சி இப்போது முழு வீச்சோடு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக படிப்பு , பேச்சு , கட்டுரை , பொதுஅறிவு , ஓவியம் , நடிப்பு உள்ளிட்ட பல்வகைத் தனித்திறன்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் , NCC - NSS - பசுமை படை - நூகர்வோர் அமைப்பு - பிளானிங் பாரம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணியாற்றும் மாணவர்களையும் தேர்வுசெய்து அவர்களுக்கு இந்நூலைப் பரிசாக அளிக்கும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இத்திட்டத்தின்படி கரூர் - வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் 75 பேரை நிர்வாகம் 3 பேராசிரியர்கள் கொண்ட குழுவின் மூலம் தேர்வு செய்திருந்தது. அவர்களுக்கு இந்நூல் கல்லூரி நிர்வாகத்தால் பரிசாக வழங்கப்பட்டது. நூலின் மூன்றாம் பாகம் வெளியான 27.02.2022 ஆம் தேதி கல்லூரி வளாகத்திலேயே வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினரான மாண்பமை நீதியரசர் ஆர். மகாதேவன் நூல் பிரதிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
 
நூலைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் நீதியரசர் ஆர். மகாதேவன் , நூலாசிரியர் த. ஸ்டாலின் குணசேகரன் , கல்லூரித் தாளாளர் க. செங்குட்டுவன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.
 
இதேபோன்று தமிழகமெங்கும் இந்நூல் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்குக் கிடைக்கப்பெறவும் , அவர்களின் வாசிப்புக்கு இந்நூல் வசப்படவும் பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 
ஆம் ... இது ஒரு மாபெரும் தொடக்கம். மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும் , சமூக உணர்வையும் ஏற்படுத்தும் முயற்சி. அனைத்து மாணவர்களும் மக்களும் பயன்படும் விதத்தில் பள்ளி - கல்லூரி நூலகங்களிலும் பொது நூலகங்களிலும் இந்நூலை இடம்பெறச் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
by Swathi   on 13 Mar 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.