|
|||||
சென்னை முதல் கோவை வரை வந்தே பாரத் ரயில் சேவை. |
|||||
சென்னை: 08/04/2023 சென்னை முதல் கோவை வரை வந்தே பாரத் ரயில் சேவையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். கட்டண விபரம் : ஊர்- 'ஏசி' சேர்கார் -- 'ஏசி' எக்ஸ்கியூடிவ். சென்னை - சேலம். ரூ. 895 -1,740, சென்னை - ஈரோடு. ரூ. 985 -1,930, சென்னை - திருப்பூர்.ரூ. 1,280 - 2,325, சென்னை - கோவை.ரூ. 1,365 - 2,485. என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் தானியங்கி கதவு வசதி, இலவச இணையதள சேவை வசதி, மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை வசதிகள் இருக்கும் .
எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை சென்னை - கோவை இடையிலான சேவையைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடியசைத்துத் துவங்கி வைத்தார். இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, சென்னை சென்ட்ரல் - கோவை, வந்தே பாரத் ரயில் சேவையானது 09/04/2023 முதல் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என்று கூறினார். மேலும் இந்த ரயிலானது, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும். சேலம், திருப்பூர், மற்றும் ஈரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். முதல் சேவையாக எட்டுப் பெட்டிகளும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து பின்னர் அதிகப் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயிலில் கோவையை 5 மணி 50 நிமிடத்தில் சென்றடையும். கட்டண விபரம் : 'ஏசி' சேர்கார் -- 'ஏசி' எக்ஸ்கியூடிவ். சென்னை - சேலம் ரூ. 895 -1,740, சென்னை - ஈரோடு. ரூ. 985 -1,930, சென்னை - திருப்பூர்.ரூ. 1,280 - 2,325, சென்னை - கோவை.ரூ. 1,365 - 2,485. என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் தானியங்கி கதவு வசதி, இலவச இணையதள சேவை வசதி, மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை வசதிகள் இருக்கும் . |
|||||
by Bharathidasan P on 08 Apr 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|