|
||||||||
வழக்கம் போல |
||||||||
காலையில் கண் விழிக்கிறேன்,
காலையில் கண் விழிக்கிறேன், வழக்கம் போல பார்வை கடிகாரம் மீது ! மணி எட்டு மனது பதறுகிறது ! சத்தமிட்டு கூவுகிறேன்,விரைந்து வந்த என் மனைவி என் நிலை கண்டு தயங்குகிறாள்,ஏதோ சொல்ல வருவதை காதில் வாங்கவில்லை ! எழுந்து ஓடுகிறேன் புழக்கடைக்கு. உடை மாற்றி வெளியே வந்த என்னை மிரண்டு போய் ஏதோ சொல்ல வருகிறாள் என் மனைவி. 'பேசாதே" பசிக்கிறது. பா¢தாபமாய் பார்த்து உணவிடுகிறாள் வேக வேகமாய் விழுங்குகிறேன். நேரமாயிற்று ! சரியான நேரத்தில் அலுவலக்த்தில் ஆஜரான என்னை ஆச்சர்யமாய் பார்க்கிறார்கள் அலுவலக நண்பர்கள். மெல்ல என் தோளை அணைத்து நீங்கள் நேற்றுடன் ஓய்வு பெற்றுவிட்டீர்கள் !.
|
||||||||
As usual | ||||||||
by Dhamotharan.S on 12 Jul 2016 0 Comments | ||||||||
Tags: Retirement Quotes Tamil Retirement Quotes Oivu Kavithai ஓய்வு கவிதை பணி ஓய்வு கவிதை ஓய்வு கவிதை பணி ஓய்வு கவிதை | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|