LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மதுரை மாநகரில் முதல் உலகத் தமிழிசை மாநாடு...

மதுரை மாநகரில் முதல் உலகத் தமிழிசை மாநாடு...

டிசம்பர் 14,15 தேதிகளில் மதுரையில்  நடைபெறவிருக்கும் முதல் உலகத் தமிழிசை மாநாட்டின் திட்டமிடல் , ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர்.கோ.விசயராகவன் தலைமையில் , இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலரும், இணைப் பேராசிரியருமான முனைவர்.கு.சிதம்பரம் அவர்கள் ஒருங்கிணைப்பில் மிகச்சிறப்பாக நடந்துவருகிறது. இதற்காகத்  தமிழிசை குறித்த தலைப்புகளில் உலகெங்கிலுமிருந்து வந்துள்ள ஆய்வுக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து நூலாக வெளியிடும் பணிகள் மிகவும் துரிதமாக நடந்துவருகின்றன.  

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பழக்கத்தில் இருந்த தொன்மையான இசை வடிவங்கள், கருவிகள், கலைஞர்கள், இசை நடனங்கள், ஆய்வு நூல்கள், ஆய்வாளர்கள், இசைக்கலைஞர்கள் என்று பல்வேறு கோணங்களில் அடையாளம் கண்டு தொகுக்கக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

இதற்காகத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்கள் முன்னிலையில் ஒரு ஆலோசனைக்கூட்டமும்,   திரு.வி.ஜி.சந்தோசம் , முனைவர்.சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட பலரை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டமும்,   கவிஞர்.அறிவுமதி, இன்னிசையேந்தல்  திருபுவனம் குரு.ஆத்மநாதன், இசைக்கல்லூரி முதல்வர்கள்,  வலைத்தமிழ் ஆசிரியர் திரு.ச.பார்த்தசாரதி, பத்திரிகையாளர் திரு.அக்கினி பாரதி, இசை அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள்  உள்ளிட்ட பலரை  அழைத்து மற்றொரு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் இயக்குநர் முனைவர்.கோ.விசயராகவன்  மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சிதம்பரம் குப்புசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முனைவர்.சிதம்பரம் குப்புசாமி, திரு.அக்கினி பாரதி ஆகியோர் கொண்ட குழு பல இசை ஆர்வலர்கள், புரவலர்களைச்  சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் பெருமைமிகு விழா மதுரையில் ஒரு மிகப்பெரிய வெற்றிவிழாவாக, அரசு விழாவாக நடந்து இசைத்தமிழுக்கு ஏற்றம் கொடுக்கும் என்பதில் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு வெற்றிபெறுவதற்குக் கடுமையாக உழைத்துவரும் , திட்டமிட்டுவரும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.கோ.விசயராகவன் , ஒருங்கிணைப்பு செயலர் முனைவர்.கு.சிதம்பரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு அனைவரும் இசைவரலாற்றில் இடம்பெறுவார்கள்.

 

உலகம் முழுதும் தமிழிசை வளர்ச்சியில் ஊக்கம் கொண்டுள்ள, முத்தமிழை போற்றும் தமிழ்ச்சங்கங்களும், தமிழ்த்தொண்டு செய்யும் அனைவரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குத் தங்கள் வாழ்த்துகளையும் , ஒத்துழைப்பையும் நேரடியாகத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்...

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.