சிரியாவில், ரசாயன குண்டுகளை வீசி, விஷ வாயுவை பரவவிட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்து உள்ளார்.
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த, பார்லிமென்ட்டின் ஒப்புதலை அமெரிக்க அதிபர் ஒபாமா கோரியுள்ளார் . ஒபாமாவின் இந்த நடவடிக்கை, சிரியா மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையிலிருந்து பின்வாங்குவதாக உள்ளது' என, சிரியா பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன. ஆனால் இந்த கருத்தை, அமைச்சர் ஜான் கெர்ரி மறுத்துள்ளார். ""சிரியா விஷயத்தில், அமெரிக்க அரசு சுதந்திரமாக செயல்படுவதற்காக தான், இந்த நடவடிக்கையை ஒபாமா எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்து உள்ளார். சிரியாவில் போர் பதற்றம் நிலவி வருவதால், அரபு நாடுகள் நேற்று கூடி இது குறித்து விவாதித்தன. எகிப்து, ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகள், "தாக்குதலுக்கு பதில், பேச்சு வார்த்தையின் மூலம் இப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும்' என வற்புறுத்தியுள்ளன.
|