குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விசா கேட்டு விண்ணப்பித்தால், அவருக்கு விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திற்கு முதல்வர் நரேந்திர மோடியே காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி, அவர் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை அடுத்து நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட விசாவை அமெரிக்க அரசு திரும்பப் பெற்றது. இன்று வரை அவருக்கு விசா வழங்கப்படவில்லை. சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மோடி விசா விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா அதிகாரிகளிடம், பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்திய எம்.பி.,க்கள் 65 பேர் மோடிக்கு விசா வழங்ககூடாது என அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் அனுப்பினர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி ஜென் சாக்கி கூறியதாவது, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விசா கேட்டு விண்ணப்பித்தால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
|