|
|||||
சீனாவிற்கு அணுசக்தி தொழில்நுட்பம் வழங்குவதை தடுத்து நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை! |
|||||
சீனாவிற்கு அணுசக்தித்தொழில் நுட்பம் வழங்குவதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க துவங்கி இருக்கிறது. அமெரிக்காவின் தொழில் நுட்ப அறிவை சட்ட விரோதமான முறையில் சீனா திருடி வருவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்ததால், சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலை அடைந்திருப்பதாக சர்வதேச நிதியம் கவலை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சீனாவிற்கு வழங்கப்படும் அணுசக்தி தொழில்நுட்பத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் எரிசக்தித்துறை அமைச்சர் உறுதிப்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவிடம் இருந்து பெற்ற அணுசக்தி தொழில் நுட்பத்தின் மூலம் தென் சீன கடற்பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி அங்கு அணுசக்தி நிலையங்களை உருவாக்கி வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் அந்த நாட்டிற்கு அணுசக்தி தொழில்நுட்பம் வழங்குவதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தங்கள் நாட்டில் உள்ள தொழிற்துறைகள் பாதிக்கப்பட்டாலும் அதைப்பற்றி கவலைபடப் போவதில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்து உள்ளது. |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|