திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம்.
பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.
அடுத்தடுத்து உண்ணாமல் முன்னே உண்ட உணவு சீரணிக்கும்வரை மறுபடியும் உண்ணாமலிருப்பதே ஆரோக்கியத்துக்கு அவசியமானது போல, அடுத்தடுத்துப் புணராமல் முன் புணர்ந்த அலுப்புத் தீரும்வரை மீண்டும் புணராமல் பிரிந்திருப்பதே காம இன்பத்துக்கு அவசியமானது.