ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த தலைவர் என்ற வரலாற்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அட்டெர்ன் படைத்துள்ளார்.
பதவியில் இருந்தபோதே குழந்தை பெற்றுக்கொண்ட பெண் தலைவர் என்ற கவுரவத்தை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவிற்கு அடுத்தபடியாக ஜெசிந்தா அட்டெர்ன் பெற்றார்.
தற்போது நியூயார்கில் நடைபெற்று வரும் ஐநா. பொதுச்சபை கூட்டத்திற்கு தனது 3 மாத கைக்குழந்தையுடன் வந்து கலந்துகொண்டார்.
ஐநா கூட்டத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தலைவர் வந்து பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதால் ஜெசிந்தா வரலாறு படைத்துள்ளார். அவரது குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐ.நா. அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|