LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இலவசமாக திறந்த நிலைக் கல்வியை அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து பல்கலைகழகம் !!

மாணவர்களுக்கு இணையதளம் மூலம், இலவசமாக திறந்த நிலைக் கல்வியை வழங்க இங்கிலாந்து பல்கலைக் கழகங்கள் முடிவு செய்துள்ளன. இந்த தொலைதூர கல்வியை மாணவர்கள், வீட்டில் இருந்த படியே, மொபைல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் பெறலாம். இந்த புதிய கல்வித்திட்டங்களுக்கான பாடத்திட்டங்கள், இணைய தளத்திலேயே கிடைக்கும். இப்புதிய பாடதிட்டங்களை, பர்மிங்காம், நாட்டிங்காம், வார்விக், பிரிஸ்டல் உள்ளிட்ட பல்கலைக் கழகங்கள், தயாரித்துள்ளன. திறந்த நிலை கல்வி மூலம், ஆன்லைனில் இலவசமாக வழங்கப்படும், இப்பாடத்திட்டத்தில், 20 விதமான, குறுகிய பாடத்திட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இதில், எட்டு திட்டங்கள், இந்த ஆண்டு முதல் துவங்கப்படுகின்றன. இதன் மூலம், 20 ஆயிரம் மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இப்புதிய பாடத்திட்டங்களில் சேர்ந்து பயிலும் மாணவ மாணவியருக்கு வினாக்கள், சோதனை ரீதியாக, பன்னோக்கு அடிப்படையில் கேட்கப்படும். இதற்கு, எவ்விதமான முன் கல்வித்தகுதியும் தேவையில்லை. இந்த கல்வியை பெறும் மாணவர்களுக்கு எவ்விதமான சான்றிதழ்களும் அளிக்கப்படமாட்டாது. இருப்பினும், பல்கலைக் கழகங்களில் படித்த அனுபவமும், அறிவும் மாணவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே கிடைக்கும். இந்த இலவசமாக திறந்த நிலைக் கல்வி கடந்த 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 26 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.