LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவின் F-35 போர் விமானம் பறக்கும் போதே திடீர் மாயம்

 

மிக நவீன போர் விமானம் ஒன்று எங்கே சென்றது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க ராணுவம். F-35 வகையை சேர்ந்த இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அவசரமாக பாரசூட் மூலமாகக் குதித்துவிட்டார். அதன் பிறகு விமானம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 17/09/2023 பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனது. பாராசூட் உதவியுடன் குதித்த விமானி, மருத்துவமனையில் உள்ளார்.
என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் விமானம் ‘விபத்துக்குள்ளானதாக’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சார்லஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள இரண்டு ஏரிகளை மையப்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
கடைசியாக விமானம் பறந்த இடத்தைப் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மௌல்ட்ரி ஏரி, மரியான் ஏரி ஆகியவற்றில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
சார்லஸ்டனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கூட்டுப் படைத் தளம் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறது. "அவசர கால மீட்புக் குழுக்கள் F-35 விமானத்தை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இந்த முயற்சி தொடர்வதால் பொதுமக்கள் ராணுவம், சிவில் அதிகாரிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று அதில் கூறப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்களுக்கு உதவும் தகவல்களைத் தெரிவிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, மாயமான விமானத்துடன் பறந்ததாகக் கருதப்படும் இரண்டாவது F-35 ஜெட் விமானம் சார்லஸ்டனில் உள்ள தளத்திற்கு பாதுகாப்பாக திரும்பியது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜ் மெலனி சலினாஸ் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. F-35 என்பது உலகின் மிகப்பெரிய, அதிகப் பொருட் செலவிலான ஆயுதத் திட்டமாகும்.

மிக நவீன போர் விமானம் ஒன்று எங்கே சென்றது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க ராணுவம். F-35 வகையை சேர்ந்த இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அவசரமாக பாரசூட் மூலமாகக் குதித்துவிட்டார்.

அதன் பிறகு விமானம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.கடந்த ஞாயிற்றுக்கிழமை 17/09/2023 பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனது. பாராசூட் உதவியுடன் குதித்த விமானி, மருத்துவமனையில் உள்ளார்.என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,

ஆனால் விமானம் ‘விபத்துக்குள்ளானதாக’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சார்லஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள இரண்டு ஏரிகளை மையப்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.கடைசியாக விமானம் பறந்த இடத்தைப் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மௌல்ட்ரி ஏரி, மரியான் ஏரி ஆகியவற்றில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

சார்லஸ்டனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கூட்டுப் படைத் தளம் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறது. "அவசர கால மீட்புக் குழுக்கள் F-35 விமானத்தை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இந்த முயற்சி தொடர்வதால் பொதுமக்கள் ராணுவம், சிவில் அதிகாரிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

650 கோடி ரூபாய் மதிப்பு

மீட்புக் குழுக்களுக்கு உதவும் தகவல்களைத் தெரிவிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.இதனிடையே, மாயமான விமானத்துடன் பறந்ததாகக் கருதப்படும் இரண்டாவது F-35 ஜெட் விமானம் சார்லஸ்டனில் உள்ள தளத்திற்கு பாதுகாப்பாக திரும்பியது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜ் மெலனி சலினாஸ் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விமானம் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. F-35 என்பது உலகின் மிகப்பெரிய, அதிகப் பொருட் செலவிலான ஆயுதத் திட்டமாகும்.

by Kumar   on 20 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.