|
|||||
வாக்காளர்களுக்கு பயிற்சி தர வாக்குச்சாவடி எல்லை வரை நடமாடும் வாகனம்! |
|||||
வாக்காளர்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செயல்விளக்கம் அளிக்க, நடமாடும் விழிப்புணர்வு வாகனங்கள், 9 - ந் தேதி முதல், தொகுதிக்குள் வலம்வர உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து கொண்டிருக்கும் தேர்தல் பிரிவினர், யாரும் எதிர்பார்க்காத வகையில், வாக்காளருக்கு, நேரடி செயல்விளக்கம் அளிக்கவும் திட்டமிட்டு உள்ளனர் தேர்தல் வரலாற்றில் இதுவரை, தேர்தல் அலுவலர்களுக்குத்தான் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. பொதுமக்களுக்கு, ஊடகங்கள் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலை மாறிவிட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில், வாக்களித்தது யாருக்கு என உறுதி செய்யும், 'விவி- பேட்' இயந்திரம் பயன்படுத்தப்பட இருப்பதால், வாக்காளருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி எல்லை வரையில், வாக்காளரை தேடிச்சென்று, வாக்களிப்பது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து தேர்தல் பிரிவினர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும், 'விவி -பேட்' கருவியுடன் கூடிய, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு, வாக்காளர்கள் ஏற்கனவே தயாராகி விட்டனர்.இருப்பினும், 'விவி-பேட்' பயன்பாடு குறித்து சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி எல்லைகளுக்கு நேரில் சென்று, வாக்காளருக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. ந்தேகங்களும், உடனுக்குடன் தீர்க்கப்படும்.நேரடி செயல் விளக்க பயிற்சிக்காக, நடமாடும் விழிப்புணர்வு வாகனங்கள், தொகுதிக்குள் வலம் வர உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும், 5 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம், பயிற்சிக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். |
|||||
by Mani Bharathi on 08 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|