LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் 3 தமிழர்கள் சாகசப்பயணமாக தமிழகம் வருகை!

சிங்கப்பூரில் இருந்து பைக் மூலம்3 தமிழர்கள் சாகசப் பயணமாக  தமிழகம்  வந்தனர்.

சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தமிழர்களான அருணகிரி, பன்னீர்செல்வம், பாலசந்தர் ஆகிய 3 பேரும் கடந்த மார்ச் 21ஆம் தேதி அதிக திறன் கொண்டு தயாரிக்கப்பட்ட ராட்சத பைக்குகளில் சாலை வழியாக தங்களின் சாகசப் பயணத்தைத் தொடங்கினர். 

அவர்கள் சிங்கப்பூரில் தொடங்கி இலங்கை, மலேசியா, மியான்மர், தாய்லாந்து, நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்தனர்.நம் நாட்டின் 16 மாநிலங்களில் நெடுஞ்சாலை வழியாகப் பயணம் மேற்கொண்ட இந்த 3 பேரும் கேரள மாநிலத்தில் இருந்து புறப்பட்டு தமிழகம் வந்தனர்.

மாமல்லபுரம் வந்த அவர்கள் கூறியதாவது:
சிங்கப்பூரில் இருந்து மார்ச் மாதம் 21-ஆம் தேதி எங்களின் சாகசப் பயணத்தைத் தொடங்கினோம். பைக்கில் வரும் போது சில நாடுகளில் கடல் வழியாகச் செல்ல வேண்டி இருந்தது. 

இதனால் அந்தந்த நாடுகளில் உரிய அனுமதி பெற்று கப்பலில் சென்று, பின்னர் பைக்கில் பயணம் தொடர்ந்தோம். இதுவரை நாங்கள் 17 ஆயிரம் கி.மீ. தூரத்தை அதிநவீன கருவிகள் பொருத்திய ராட்சத பைக்குகளில் கடந்துள்ளது பெருமிதம் அளிக்கிறது, இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த மூன்று பேரும் மாமல்லபுரம் முழுவதும் நகர்வலம் வந்தனர். ஆங்காங்கே தங்கள் பைக்குகளை நிறுத்திவிட்டு சிற்பங்களைக் கண்டு ரசித்தனர். அப்போது நகரவாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் இந்த மூவரின் பைக்குகளையும் வேடிக்கை பார்த்தனர். அதன் பின் மூவரும்  சென்னைக்கு புறப்பட்டனர்.

by Mani Bharathi   on 10 May 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.