வாஷிங்டன் : வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழா ஜனவரி 18-ம் நாள் நார்த்வெஸ்டன் ஹைஸ்கூல், 7000 அடெல்பி ரோடு, ஹயட்விள்ளி, மெரிலாந்து என்னும் முகவரியில் நடைபெறவிருக்கிறது. இதில் 'ஒரு திருக்குறளுக்கு ஒரு டாலர்' எனும் குழந்தைகளுக்கான மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, 'குழந்தைகளுக்கு நல்ல பெயர் சூட்டுவது எப்படி?' என்ற தலைப்பில்கலகலப்புக் கலந்துரையாடல், பெண்களுக்கான வண்ணக்கோலப் போட்டிகள், குழந்தைகள் மீது தமிழ்ச்சங்கத்தின் தாக்கம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., நினைவு நாளைஒட்டி காலத்தால்அழியாவரம் பெற்ற பாடல்கள் மற்றும் இவ்வட்டாரத்திலுள்ள தமிழர் சார்ந்த அமைப்புகளெல்லாம் இணைந்து ‘ஒன் பொங்கல் :ஒரே இனம் - ஒரே இடம் - ஒரே பொங்கல்' என்று குழந்தைகள், பெண்கள், தமிழார்வலர்கள் என அனைவருக்குமான நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறவிருக்கின்றன. வாசிங்டன் பகுதி வாழ் தமிழர்கள் இந்த நிகழ்வில் தவறாமல் பங்கெடுத்துக் கொள்ளவும்.
|